உஸ்ரி எனும் இந்த நீர்வீழ்ச்சி கிரிதிஹ் மாவட்டத்தில் துண்டி சாலையில் அமைந்திருக்கிறது. கிரிதிஹ் நகரத்திற்கு கிழக்கே 13 கி.மீ தூரத்தில் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக இது வீற்றிருக்கிறது.
இந்த நீர்வீழ்ச்சி ஸ்தலத்தில் மூன்று வீழ்ச்சிகளாக பிரியும் ஆறானது 40 அடி ஆழப்பிளவில் கீழ்நோக்கி விழுகிறது. உஸ்ரி நீர்வீழ்ச்சியை சுற்றிலும் அடர்ந்த பரஸ்நாத் வனப்பகுதி சூழ்ந்து காணப்படுகிறது.
மலையிலிருந்து பெருகிப்பாயும் ஆற்றின் ரம்மியத்தை பார்த்து ரசிக்கும் அனுபவம் மறக்க முடியாத சுற்றுலா ஞாபகமாய் பயணிகள் மனதில் பதியும் என்பதில் சந்தேகமேயில்லை.
கிரிதிஹ் நகர ரயில் நிலையத்திற்கு இந்த நீர்வீழ்ச்சி ஸ்தலத்திற்கு வருவதற்கான ஆட்டோ, டாக்சி அல்லது டங்கா போன்ற போக்குவரத்து வசதிகள் கிடைக்கின்றன.
உஸ்ரி நீர்வீழ்ச்சி, கண்டோலி அணை மற்றும் பரஸ்நாத் மலை போன்ற முக்கியமான சுற்றுலாத்தலங்களுக்கு சுற்றுலாப்பயணிகளும் யாத்ரீகர்களும் சிரமமின்றி சென்று வருவதற்கான அடிப்படை வசதிகளை உருவாக்கும் முயற்சியில் தற்போது மாநில அரசு ஈடுபட்டுள்ளது.