கோமுக்கில் அமைந்திருக்கும் இன்னுமொரு முக்கிய அம்சம் அங்கு பாயும் பகிரதி ஆறு ஆகும். கங்கை ஆற்றின் கிளை ஆறான இந்த பகிரதி ஆறு கோமுக்கில் உற்பத்தியாகிறது.
இந்த ஆறு இந்து மக்களின் புனித ஆறாகக் கருதப்படுகிறது. இந்தப் பகுதியை ஆண்ட பண்டைய மன்னரான பகிரதா என்பவரின் பெயரே இந்த ஆற்றுக்குச் சூட்டப்பட்டிருக்கிறது.
இந்த பகிரதா அரசர் தனது 60000 மாமன்களை, கபிலா என்ற முனிவரின் சாபத்திலிருந்து விடுவிப்பதற்காக, சொர்க்கத்திலிருந்து கங்கை ஆற்றைக் கொண்டு வந்ததாக ஒரு புராணம் கூறுகிறது. இந்த ஆறு கடல் மட்டத்திலிருந்து 3892 மீ உயரத்தில் அமைந்திருக்கிறது.