இந்திய சுதந்திரத்துக்கு முன் காத்தியவரில் வெள்ளையர்கள் கட்டுப்பாட்டில் இந்திய மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்ட எட்டு இடங்களில் ஒன்று தான் கோண்டல். இங்கு ஆட்சி செய்தவர்கள் கார்கள் மீது அதிக ஈர்ப்புடன் இருந்தனர். அதனால் அந்த நேரத்தில் குஜராத்தில் இந்த இடத்தில் நல்ல சாலை இடப்பட்டிருந்தன. கி.பி.1643-ஆம் ஆண்டு தாக்கோர் ஸ்ரீ கும்போஜி இ மேரமாஞ்சியால் கோண்டல் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின் வந்த ஸ்ரீ பகவத் சிங்ஜி கோண்டலை இந்தியா சுதந்திரம் பெரும் வரை ஆட்சி செய்தார்.
ஆற்றங்கரையில் அமைந்துள்ள அரண்மனையை அவரது மகனான யுவராஜ் போஜ்ராஜி கட்டினார். தற்போது அது ஹெரிடேஜ் ஹோட்டலாக உள்ளது. இங்குள்ள பழமை வாய்ந்த பர்நிச்சர்கள், விளக்குகள் மற்றும் பிற சோடினைகளை பார்ப்பதற்கு கண் கொள்ள காட்சியாக இருக்கும்.
இங்குள்ள அரச குடும்பம் எப்போதுமே விண்டேஜ் கார்களின் மீது பற்றுடன் இருந்தனர். அவர்கள் கார்களின் திரட்டல் இன்று சுற்றுலாப் பயணிகளுக்கு காட்சி பொருளாக திகழ்கிறது. 17-ஆம் நூற்றாண்டு கட்டட அமைப்பை பெற்ற மற்றொரு அரண்மனையான நவ்லாக்ஹா அரண்மனை இங்குள்ளது.
இதை கட்டி முடிக்க 9 லட்சம் செலவானதால் இது அப்பெயரை பெற்றது. இதனுள் கற்களில் செய்யப்பட்ட அற்புதமான சிற்பங்கள், மேல் மாடங்கள்கள் (ஜாரோகாஸ்), செதுக்கப்பட்ட வளைவுகள் மற்றும் சுழல் படிகட்டுகளை காணலாம்.
தற்போது அரச குடும்பம் வசிக்கும் ஹுசூர் அரண்மனை முழுவதும் பழமையான பர்நிச்சர்கள், ஓவியங்கள், தோப்புகள் மற்றும் தோட்டங்களுடன் நிறைந்து இருக்கிறது. ஸ்வாமிநாராயண் சம்பிரடேவுக்கு கோண்டலில் அக்ஷர் மந்திர் என்ற ஒரு கோவில் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் இங்கு குணாதித்தானந்த் சுவாமியின் சமாதி ஒன்றும் அமைந்துள்ளது. சுரேஷ்வர் மகாதேவ் கோவில், தரேஷ்வர் மகாதேவ் கோவில் மற்றும் புவனேஸ்வரி மந்திர் ஆகியவைகள் கோண்டலிலுள்ள முக்கியமான சமயஞ்சார்ந்த இடங்களாகும்.