மா தாரா தாரிணி மலைக் கோவில் நாட்டின் பழமையான மலைக்கோவில்களில் ஒன்றாகும். குமாரி குன்றுகளின் மேல், ருஷிகுல்யா நதிக்கரையில் இக்கோவில் உள்ளது.
பெஹ்ராம்பூரில் இருந்து 13கிமீ தொலைவில் உள்ள இந்த இடத்திற்கு வருடந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்.
இங்கிருக்கும் கடவுள்களான மா தாரா, மா தாரிணி ஆகியோர் சக்தியின் வடிவங்கள் என உள்ளூர் மக்கள் கருதுகிறார்கள். புவனேஷ்வரில் இருந்து 174கிமீ தொலைவில் இக்கோவில் உள்ளது.