கெளஸ்மி காடுகள் கோரக்பூரின் மிகப் பிரபலமான சுற்றுலா பகுதியாகும். இது முக்கியமான இரயில்வே சந்திப்பிற்கு மிக அருகில் உள்ளது. இந்த காடுகள் சால்மற்றும் செகோயா மரங்களுக்கு மிகவும் புகழ் பெற்றது. இங்கு குரங்குகள், மான் மற்றும் நரி போன்ற பல விலங்குகள் காணப்படுகின்றன.
இங்கு வனதேவதையான புத்தியா தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அழகான கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரார்த்தனை செய்தால் அது கண்டிப்பாக நிறைவேறும் என்கிற நம்பிக்கை பக்தர்களிடையே நிலவுகிறது. மேலும் இந்த காட்டிற்கு மிக அருகில் ஒரு பூங்கா மற்றும் உயிரியல் பூங்கா ஆகியன அமைந்துள்ளன.