குஹாகர் பகுதியில் அஞ்சன்வேல் கிராமத்தில் இந்த கோபால்காட் மலை அமைந்துள்ளது. அழகிய இயற்கை எழில் நிறைந்த சூழலுக்கு இந்த மலை பெயர் பெற்று விளங்குகிறது.
இந்த மலையில் அஞ்சன்வேல் கோட்டை அமைந்துள்ளது. இந்தக்கோட்டை 16ம் நூற்றாண்டு வாக்கில் அப்போதைய பிஜாப்பூர் அரசர்களால் கட்டப்பட்டுள்ளது. பின்னர் 1660ம் ஆண்டு இது சிவாஜி மன்னரால் கைப்பற்றப்பட்டிருக்கிறது.
1680ம் ஆண்டு சிவாஜியின் மறைவுக்குப்பிறகு இந்தக்கோட்டை சித்தி கைரத்கான் என்ற மன்னரின் ஆளுகைக்குள் வந்து பின்னர் துலோஜி ஆங்க்ரே என்பவரால் 1744ல் கைப்பற்றப்பட்டுள்ளது.
இருப்பினும் 1818ம் ஆண்டு மராத்தா சாம்ராஜ்யத்தின் சரிவுக்குப் பின்னர் 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெறும் வரை ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் இருந்துள்ளது.
ஏழு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த கோட்டை இரண்டு பிரிவுகளாக அமைந்துள்ளது. இதன் கீழ்த்தளப்பகுதி பாத்கோட் என்றும் மேற்தளப்பகுதி பலேகோட் என்றும் அழைக்கப்படுகிறது. எதிரிகளின் தாக்குதலைச் சமாளிக்கக்கூடிய மிக உறுதியான கட்டமைப்புடன் கூடிய கோட்டைச்சுவரை இந்தக்கோட்டை கொண்டுள்ளது.
மலையின் மீது இந்த கோட்டை அமைந்துள்ளதால் மலை ஏற்றத்துக்கான வாய்ப்புகளை இது பயணிகளுக்கு அளிக்கின்றது. பிரமிப்பூட்டும் இயற்கை காட்சிச்சூழலில் இந்த கோட்டையை அடைவதற்கு மலை ஏறும் அனுபவம் சாகச விரும்பிகளுக்கு மிகப்பிடித்தமான ஒன்றாக இருக்கும்.