ஆழந்த அமைதியுடன் காட்சியளிக்கும் இந்த கடற்கரைப்பகுதி ஓரத்தில் சுரு மரங்கள் வரிசையாக அணிவகுத்திருக்க காட்சியளிக்கிறது. இந்த கடற்கரை குஹாகர் மஹாராஷ்டிரா அரசுப் பேருந்துப் பணிமனையிலிருந்து 200மீ தூரத்தில் அமைந்துள்ளது.
இந்த கடற்கரையில் பலவிதமான உள்ளூர் உணவுத்தயாரிப்புகளை விற்கும் உணவகங்கள் காணப்படுகின்றன. இது தவிர ஒரு பல்பொருள் தெரு அங்காடியும் இங்கு கடற்கரையில் உள்ளது.
இங்கு பயணிகள் தங்களுக்கு தேவையானவற்றை வாங்கலாம்.அழுத்தம் நிறைந்த தினசரி நகர வாழ்க்கையிலிருந்து விலகி ஒரு அமைதியான சூழலில் குடும்பத்துடன் செலவிட விரும்புவோர்க்கு இது மிகவும் ஏற்ற இடமாகும்.
குறிப்பாக வாரஇறுதி விடுமுறை நாட்களை அன்புக்குரியவர்களுடன் தனிமையில் சந்தோஷமாக கழிக்க இது ஏற்ற ஸ்தலமாகும்.குழந்தைகளை கூட்டிச்செல்ல இது பாதுகாப்பான கடற்கரை என்பதுடன் தியானம், ஓய்வு மற்றும் நீச்சம் போன்ற எல்லா அம்சங்களுக்கும் உகந்தது இந்த குஹாகர் கடற்கரை.