குல்மார்க்கிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது நிங்கல் நல்லா என்னும் அழகிய நீரோடை. அல்பத்தர் ஏரி மற்றும் அபர்வாத் சிகரத்திலிருந்து கோடையில் பனிக்கட்டிகள் உருகி பெருக்கெடுக்கும் பனிநீரால் ஆனது இந்த நீரோடை.இந்நீரோடை இறுதியாக சோபோர் என்னும் இடத்திற்கு அருகில் ஜீலம் நதியில் இணைகிறது.
புல்வெளிகள் அடர்ந்த இப்பகுதி குழந்தைகளுடன் குதூகலமாக நேரத்தை செலவழிக்க விரும்புபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். அடர்ந்த பைன் மரக் காடுகளும், காட்டு மலர்களும் நிரம்பிய புல்வெளிகளும், வெள்ளிப் பனிமலைகளும் இப்பகுதியை கண்டு இன்புறத்தக்கனவாக மாற்றியுள்ளன. இங்கு வரவிரும்புபவர்கள் சாலை வழியாக வரலாம். வாடகைக் கார்களும் கிடைக்கின்றன.