குணா நகரின் முக்கிய சுற்றுலாத் தலங்களுள் பிஷ்புஜி கோவிலுக்கு முக்கிய இடம் உண்டு. இருபது கைகள் கொண்ட துர்கை அம்மனின் சிலையைக் கொண்டு இத்திருக்கோவில், பெடைட் மலையின் உச்சியில் அமைந்தூள்ளது.
இக்கோவிலில், விளக்குகளை கொண்ட ஒரு பெரிய தூண் காணப்படுகிறது. இந்த தூணை, தீப ஸ்தம்பம் என்று கூறுவர். வெகு தூரத்தில் இருந்து பார்க்கும் வகையில் இந்த தீப ஸ்தம்பம் அமைக்கப்பட்டுள்ளது.
மார்ச்-ஏப்ரல் மற்றும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் துர்காஷ்டமிப் பண்டிகை நடைபெறுகிறது. 9 நாட்களுக்கு நடைபெறும் இப்பண்டிகையில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடத்தப்படும்.
பல்வேறு இடங்களில் இருந்தும் துர்காஷ்டமிப் பண்டிகையைக் காண பக்தர்கள் இங்கு வருகின்றனர். இந்தக் கோவில், குணா நகரின் சுற்றுலா வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.