தேரா பாபா நானக்கில் உள்ள இந்த இடம் முதல் சீக்கிய குருவான நானக் குருதேவ் தனது முதல் போதனை பயணத்தை 1515ல் முடித்துவிட்டு இங்கு வந்து தனது மனைவி மாதா சுலகனி, மகன் பாபா ஶ்ரீசந்த், மகன் பாபா லக்மி ஆகியோரை சந்தித்ததாக சொல்லப்படுகிறது.
குருதாஸ்பூரில் இருந்து 45கிமீ தொலைவில் உள்ள இவ்விடம் குரு நானக் தேவ் என்பவரை நினைவுகூறும் விதத்தில் உருவாக்கப்பட்டது. முதல் சீக்கிய குருவான அவர் இங்கு 12ஆண்டுகள் வசித்ததாகவும், அவர் மெக்காவுக்கு சென்ற போது அவருக்கு அளிக்கப்பட்ட உடைகள் இங்கு உள்ளதாகவும்...
குரு நானக் அவர்கள் 1551ல் உடாசியில் இருந்து வந்தவுடன், பாபா அஜிதா ரந்த்வாவுடன் முக்கிய விவாதங்களில் ஈடுபட்ட இடமே தடா சாஹிப் எனக்கப்டுகிறது.
இங்கு குரு நானக் ஜீ தியானம் செய்ததாகவும், அஜித் ராந்த்வா போன்ற சிஷ்யர்களுக்கு போதனை வழங்கியதாகவும் நம்புகிறார்கள். அதுமட்டுமல்லாது பாபா அஜித் ராந்த்வா கிணறு ஒன்றும் இங்கு உள்ளது.
கோமனில் உள்ள ஶ்ரீ நாம்தேவ் தர்பார் ஹர்கோபிந்த்பூரில் இருந்து 10கிமீ தொலைவில் உள்ளது. இங்கு 17ஆண்டுகள் தியானம் செய்த நாம்தேவ் என்பவரின் பெயராலேயே வழங்கப்படும் இவ்வூரில் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மதம் சார்ந்த கல்வெட்டுக்கள் பல உள்ளன. திருமணம் செய்துகொண்டு இருவரும்...
தனித்துவமிக்க இந்த கோவில் நீளவடிவ சிவலிங்கள் உள்ள ஒரே கோவிலாகும். காலானூரில், 56 கிமீ தொலைவில் உள்ள இந்தக் கோவிலுக்கு சுத்தமான எண்ணங்களுடன் வருகிறவர்களின் வேண்டுதல் பலிப்பதாக நம்பப்படுகிறது.
வருடாவருடம் சிவராத்திரியின் போது இங்கு விழா கொண்டாடப்படுகிறது....
பழைய கிராமமான குருதாஸ் நங்கல் 6கிமீ தொலைவில் உள்ளது. பண்டா சிங் பகதூருக்கும் முகாலயர்களுக்கு நடந்த கடைசி யுத்தத்துடன் சம்பந்தப்பட்ட இந்த ஊர் பெரிய சுவர்களால் சூழப்பட்டுள்ளது.
குருத்வாரா ஶ்ரீ அச்சல் சாஹிப்பிற்கு எதிரே உள்ள இந்தக் கோவில் மகிழ்ச்சி மற்றும் சக்தியின் கடவுளான கார்த்திகேயருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சத்யுக் காலத்தைச் சேர்ந்த இந்தக் கோவிலுக்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகிறார்கள்.
1556-ல் ஃபிப்ரவரி 14ல் அக்பருக்கு பட்டம் சூட்டப்பட்ட இடமான இங்கு அக்பருடன் பைராம் கானும் காலானூரின் தங்கியிருந்தார். தற்சமயம் இந்த இடம் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
குருத்வாரா பாய் துனி சந்த் என்றும் வழங்கப்படும் இந்த ஊர் 7கிமீ மேற்க்கே அமைந்துள்ளது. முகாலயர்களை எதிர்த்து போரிட்டு மறைந்த சீக்கிய வீரர்களின் நினைவாக இந்த கோட்டை கட்டப்பட்டுள்ளது.
பழைய குருதாஸ்பூரின் பகுதியாக இங்கு பலவகையான சுவையூட்டும் உணவு வகைகளும், இனிப்புகளும் கிடைக்கின்றன.
குருதாஸ்பூரில் உள்ள இந்த பூங்காவின் மத்தியில் பெரிய மீன் சிலை ஒன்றுள்ளது. ஒருகாலத்தின் மீன் உணவு விற்கப்பட்ட இந்த பூங்காவில் மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்கிறார்கள். வாரத்தின் அனைத்து நாட்களிலும் இந்தப் பூங்கா இலவசமாக திறந்திருக்கிறது.
டேரா பாபா நானக்கில் உள்ள குருத்வாரா சோலா சாஹிபில் குரு நானக் 12ஆண்டுகள் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. பாக்தாத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட அவரது உடைகளும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. குருத்வாராவில் இருந்து 50மீட்டர் தூரத்தில் உள்ள சோலா சாஹிப்பையும் மக்கள்...