குருவாயூருக்கு அருகிலேயே உள்ள சிறு கிராமமான அரியானூர் என்னும் இடத்தில் இந்த ஹரிகன்யகா கோயில் அமைந்துள்ளது. மிகப்பழமையான இந்த கோயில் பெருந்தச்சன் எனும் புராணப்புகழ் பெற்ற மரச்சிற்ப கலைஞனால் வடிவமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
விஷ்ணுவின் ஒரு வடிவமான ஹரிகன்யகாவுக்காக இந்த கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஹரிகன்யகா என்பதற்கு ஹரியின் (விஷ்ணுவின்) கன்னி வடிவம் என்பது பொருளாகும்.
சிவனுக்கும் மோகினி எனப்படும் ஹரிகன்யகாவிற்கும் பிறந்த தெய்வ அவதாரமே அய்யப்பன் என்பதாக புராணங்கள் கூறுகின்றன. ஒரு காலத்தில் ஹரிகன்யாபுரம் என்று அழைக்கப்பட்ட இந்த கோயில் ஸ்தலம் பின்னாளில் அரியானூர் என்று திரிந்துவிட்டது. 32 தேசங்களின் தலைநகரமாகவும் இது அறியப்படுகிறது.
ஹரிகன்யகா கோயில் தற்போது இந்திய தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பயணிகளும் இக்கோயிலுக்கு விஜயம் செய்கின்றனர். மார்ச் – ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் 15 நாள் திருவிழா பக்தர்கள் மத்தியில் பிரசித்தம் என்பதும் குறிப்பிடத்தக்கது.