புத்தருக்காக அமைக்கப்பட்டிருக்கும் இந்த ஜனார்த்தனா கோயில் பிரம்மபுத்ரா ஆற்றிலுள்ள சுக்லேஷ்வர் காட் துறையை ஒட்டி அமைந்திருக்கும் சுக்லேஷ்வர் மலையில் உள்ளது.
இந்த கோயிலின் கட்டிடக்கலை ஹிந்து மற்றும் பௌத்த பாணி அம்சங்கள் கலந்ததாக காட்சியளிக்கிறது. எனவே தனித்தன்மையான தோற்றத்துடன் இது பார்வையாளர்களை வசீகரிக்கிறது. 17ம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டிருக்கும் இக்கோயில் அதற்கு பல ஆண்டுகள் முன்பாக கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த கோயில் அமைந்திருக்கும் இடம் ரம்மியமாக காட்சியளிக்கிறது. இங்கிருந்து பிரம்மபுத்திரா ஆற்றின் அழகை நன்கு பார்த்து ரசிக்க முடியும் என்பது ஒரு விசேஷ அம்சமாகும். சுற்றுலாப்பயணிகள் ஒரு மாலை நேரத்தை பிரார்த்தனையில் ஈடுவட்டவாறே இந்த கோயிலின் அமைதியான சூழலில் கழிக்கலாம்.
பால்டன் பஜாரிலிருந்து அரசுப்பேருந்துகள் மற்றும் வாடகை வாகனங்கள் மூலம் சுற்றுலாப்பயணிகள் மிக சுலபமாக இந்த கோயிலை சென்றடையலாம்.
அதிகாலை நேரம் மற்றும் மாலை நேரம் இந்த கோயிலுக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளன. சூரிய உதயம் மற்றும் அஸ்தமனக்காட்சிகளை கண்டு ரசிப்பதற்கு இந்த நேரங்கள் மிகவும் உகந்தவை.