போபிதோரா வனவிலங்குகள் சரணாலயம், அஸ்ஸாமின் மரிகோயான் மாவட்டத்தில் உள்ள குவாஹத்தியிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
போபிதோரா வனவிலங்குகள் சரணாலயம், அதிக அளவிலான ஒற்றைக் கொம்பு காண்டா மிருகங்களைக் கொண்டிருக்கும் சிறப்பு பெற்றதாகும். இதன் மொத்தப் பரப்பளவான 30.8 சதுர கி.மீ. பரப்பளவில் சுமார் 16 சதுர கி.மீ. அளவிலான பரப்பளவை காண்டா மிருகங்கள் மட்டுமே ஆக்கிரமித்துள்ளன.
இப்பூங்கா காண்டா மிருகங்களின் பெருக்கத்தால் திணறிக்கொண்டிருப்பதால், காண்டா மிருகங்கள் இதன் எல்லைகளைத் தாண்டியும் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.
காண்டா மிருகங்கள் தவிர்த்து, இப்பூங்காவை வருடத்திற்கொரு முறை தங்கள் ஜாகையாகக் கொள்ளும் புலம்பெயர் பறவைகள் இதன் மிகப்பெரும் ஈர்ப்பாக உள்ளது.
ஒவ்வொரு வருடமும் சுமார் 2000 –க்கும் மேற்பட்ட புலம்பெயர் பறவைகள் இப்பூங்காவை முற்றுகையிடுகின்றன. மேலும் ஆசியா கண்டத்தைச் சேர்ந்த எருமைகள், சிறுத்தைகள், காட்டுப் பூனைகள், காட்டுக்கரடிகள் போன்ற பல்வேறு விலங்குகளையும் போபிதோரா வனவிலங்குகள் சரணாலயத்தில் பார்க்கலாம்.
அக்டோபர் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடைப்பட்ட காலமே இந்த சரணாலயத்திற்கு வருகை தரக்கூடிய சிறப்பான காலகட்டம் ஆகும். குவாஹத்தியிலிருந்து சாலை வழியாக பயணித்தால் சுமார் ஒரு மணி நேரத்தில் போபிதோரா வனவிலங்குகள் சரணாலயத்தை அடைந்து விடலாம்.