உக்ரதாரா கோயில் அல்லது உக்ரோதாரா கோயில் என்று அழைக்கப்படும் இந்த கோயில் காளிதேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. இது உஜான் பஜார் பகுதியில் ஜோர் புகுரி எனும் இடத்தின் மேற்குப்புறத்தில் அமைந்துள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தின் மிக முக்கியமான ஆன்மீக யாத்திரை ஸ்தலங்களில் ஒன்றாக இந்த கோயில் பிரசித்தி பெற்றிருக்கிறது. நகரின் மையப்பகுதியிலே அமைந்திருப்பதால் மிகச்சுலபமாகவும் இந்த கோயிலை சென்றடைய முடிகிறது.
பார்வதி தேவியின் அவதார ரூபமான உக்ர தாரா இக்கோயிலில் வீற்றுள்ளார். இதன் கருவறையில் தெய்வச்சிலை ஏதுமில்லை. மாறாக நீர் நிரம்பிய ஒரு குழியை தெய்வ அடையாளமாக பக்தர்கள் வழிபடுகின்றனர். ஒ
ரு புத்த ஐதீகமும் இந்த கோயிலின் பின்னணியில் சொல்லப்படுவதால் புத்த யாத்ரீகர்களும் இந்த கோயிலுக்கு வருகை தந்து வழிபடுகின்றனர்.
ஆஹோம் வம்ச மன்னர் சிவா சிங் என்பவர் 1725ம் ஆண்டில் கட்டிய ஒரு சக்தி கோயிலையும் இந்த வளாகத்தில் பயணிகள் தரிசிக்கலாம். குவஹாட்டி நகரத்தின் மற்ற வரலாற்று சின்னங்களை போன்றே இந்த உக்ரதாரா கோயிலும் 1897ல் ஏற்பட்ட பூகம்பத்தின்போது சேதத்திற்குள்ளாகியிருக்கிறது.
எனவே நாம் தற்போது காணும் கோயில் வடிவம் பல புதுப்பிப்பு அம்சங்கள் மற்றும் மாற்றங்களை உள்ளடக்கியதாய் காட்சியளிக்கிறது.