பிரம்மபுத்ரா ஆற்றில் அமைந்திருக்கும் பீகாக் ஐலேண்ட் தீவுப்பகுதியில் இந்த கலையம்சம் நிரம்பிய உமானந்தா கோயில் வீற்றிருக்கிறது. குவஹாத்தி நகரத்திற்கே அழகு சேர்க்கும் பெருமைக்குரிய அடையாளமாக இந்த கோயில் புகழ் பெற்றுள்ளது.
சிவபெருமானுக்குரிய கோயிலான இது ஆஹோம் வம்ச மன்னரான கடாதர் சின்ஹா’வின் ஆட்சிக்காலத்தில் பர் புகான் கர்கன்யா ஹந்திக் என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது.
பிப்ரவரி மாதத்திய சிவராத்திரி திருநாளின்போது இந்த கோயில் ஏராளமான பக்தர்களை ஈர்க்கிறது. கம்பீரமான இந்த கோயிலை சுற்றி பிரம்மபுத்திரா ஆறு சூழ்ந்திருப்பது ஒரு பிரமிக்க வைக்கும் தோற்றத்தை தருகிறது.
மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனத்தின்போது இந்த கோயிலின் அற்புத தோற்றத்தை சுற்றுலாப்பயணிகள் தரிசிப்பது சிறந்தது.
இந்த கோயிலின் சுவர்களில் காணப்படும் எண்ணற்ற சித்திரப்பொறிப்புகள் ஒரு சிறப்பம்சமாக சொல்லப்படுகிறது. சூர்யன், சந்திரன், விநாயகர் மற்றும் தேவி போன்ற தெய்வங்களின் உருவங்கள் கோயில் சுவர்களில் பொறிக்கப்பட்டிருக்கின்றன.
ஃபெர்ரி படகுகள் மற்றும் மோட்டா படகுகள் மூலமாக மட்டுமே இந்த கோயிலுக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.