குவாலியர் நகரத்தின் வெளி எல்லையில் அமைக்கப்பட்டுள்ளவை இந்த சத்ரிக்கள். சத்ரி என்பது குடை போன்ற கூரையுடன் கூடிய மாடங்கள் ஆகும். பொதுவாக சத்ரி என்றால் அரச வம்சத்தினரின் கல்லறை / சமாதி என்று பொருள். ஜிவாஜி ராவ் சிந்தியா, தவுலத் ராவ் சிந்தியா ஜங்கோஜி ராவ் சிந்தியா ஆகியோரின் சத்ரிக்கள் மிகவும் முக்கியமான நினைவுச்சின்னங்களாகும்.
முகலாயர்களுக்குப் பிறகு குவாலியரை ஆண்ட மராட்டியர்களின் ஒரு பிரிவினர்தான் சிந்தியாக்கள். சிந்தியா வம்சத்தின் சத்ரிக்கள் சிவபுரி என்னும் இடத்தில் அமைந்துள்ளன.
சிவபுரி என்றால் சிவபெருமானின் நகரம் என்று பொருள். ஏராளமான கோவில்கள் அமைந்துள்ளதால் இந்துக்களின் முக்கியமான வழிபாட்டு நகரமாகவும் இது விளங்குகிறது.
இவ்விடம் சிந்தியாக்களின் ஆட்சிக்காலத்தில் வளர்ச்சியடைந்தது. மத்திய கால இந்து கட்டிடபாணிக்கு எடுத்துக்காட்டாக சிந்தியா வம்சத்தின் சத்ரிக்கள் விளங்குகின்றன. குவாலியர் நகரத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவிலுள்ள அமர்கண்டக் என்னுமிடத்தில் இவை உள்ளன.