இயற்கை எழில் கொஞ்சும் இடம் தேவ் கோ. பல வகையான வனவிலங்குகளும் பறவைகளும் வாழும் இயற்கையான வனப்பிரதேசமாகும். எனவே பறவை ஆர்வலர்களும் வனவிலங்கு ஆர்வலர்களும் அடிக்கடி வருகை புரியும் இடம் இது.
இதனைத்தவிர, அழகிய குன்றின் மீது அமைக்கப்பட்ட பழமையான சிவன் கோவில் ஒன்றும் இங்குள்ளது. சிற்பக்கலையில் ஆர்வமுள்ளோர்களும் பக்தர்களும் இங்கு வருகிறார்கள்.
குவாலியர் நகரத்திலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இவ்விடம் உள்ளது. புகைப்படக் கலைஞர்களுக்கு இவ்விடத்தைப் பரிந்துரைத்தால் அவர்கள் இவ்விடத்தைக்கண்டு மகிழ்வார்கள்.