ஜௌஹார் குண்ட் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். இது மன்மந்திர் அரண்மனைக்கு உள்ளே அமைந்துள்ளது. இந்தி மொழியில், ஜௌஹார் என்றால் தற்கொலை என்று பொருள்.
டில்லி சுல்தான் இல்டுமிஷ் குவாலியர் கோட்டையைத் தாக்கியபோது ராஜபுத்திரர்களின் மனைவியர் கூட்டம் கூட்டமாக இக்குளத்தில் குதித்தும், நெருப்பில் குதித்தும் தம் உயிரை மாய்த்துக்கொண்டார்களாம்.
1232-ஆம் ஆண்டு குவாலியர் மன்னர் தோற்கடிக்கப்பட்டபோது ஆயிரக்கணக்கான ராஜபுத்திர பெண்கள் இக்குளத்தின் அருகில், சதியென்னும் உடன் கட்டை ஏறினார்கள்.
இக்குளமானது, கோட்டை முழுமைக்கும் தண்ணீர் சப்ளை செய்யும் வகையில் மத்தியகாலக் கட்டிடபாணியில் அமைக்கப்பட்டது. ஆனால், பெண்கள் அனுபவித்த சமத்துவமின்மையையும், அடக்குமுறையையும் குறித்த ஒரு வரலாறு இக்குளத்திற்கு உண்டு என்று நம்பப்படுகிறது.