குவாலியர் ரயில்வே நிலையத்திற்கு வெகு அருகில் அமைந்துள்ளது பூல் பாக். அக்காலத்திய மராட்டிய மன்னர் மாதவராவ் ஷின்டே என்பவரால் கட்டப்பட்டு, ஆங்கிலேய வேல்ஸ் இளவரசரின் இந்திய வருகையின் போது 1922 இல் அவரால் திறந்துவைக்கப்பட்டது. பூல் பாக் வளாகத்தினுள், குவாலியர் மிருகக் காட்சி சாலை, அருங்காட்சியகம், குருத்வாரா, கோவில், மசூதி ஆகியவை அமைந்துள்ளன.