பூல் பாக் என்னுமிடத்தில் ராணி லட்சுமிபாயின் சமாதி அமைந்துள்ளது. இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்றில் குறிப்பிடத்தக்க, புகழ்பெற்ற பெண் வீராங்கனையான ஜான்ஸி ராணி லட்சுமி பாயின் வீரத்தினை நினைவு கூறும் விதமாக இது அமைக்கப்பட்டது.
1857-ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற முதலாம் இந்திய சுதந்திரப்போரில் ஈடுபட்டவர் ஜான்ஸிராணி. இச்சமாதி இந்தியாவின் மிகப்பெரிய வீராங்கனையின் நினைவைப் போற்றுகிறது.
ஜான்ஸி ராணி லட்சுமி பாயின் 8 மீட்டர் உயரமுள்ள சிலை இங்கு நிறுவப்பெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் ராணி லட்சுமி பாயின் நினைவாக பொருள்காட்சி ஒன்று நடத்தப்படுகிறது. இப்பொருள்காட்சி குவாலியருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையினைப் பெருக்க உதவுகிறது.