சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பாடேஷ்வர்நாத் கோவில் பீகாரின் பழமையான கோவில்களில் ஒன்றாகும். இது ஹஜிபுரின் கிழக்கு திசையில் அமைந்துள்ளது.
இந்த கோவில் கட்டப்பட்ட ஆண்டு முகலாய காலத்திற்கும் பின்னோக்கி செல்கிறது. இந்தக் கோவிலானது ஆயிரம் ஆண்டு பழமையான ஆலமரத்தின் மத்தியில் இருந்து சுயமாக வெளிப்பட்டது என நம்பப்படுகின்றது.
இதன் விளைவாக பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் இந்த ஸ்தலத்திற்கு வருகை புரிகின்றனர். இங்கு பிப்ரவரி மாதத்தில் பசந்த் பஞ்சமி திருவிழா விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றது.
அதனைத் தொடர்ந்து நீண்ட காலத்திற்கு மஹாசிவராத்திரி விழாவை பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். மன அமைதி மற்றும் ஆன்மீக தேடல்களை உடைய அனபர்களுக்கு இது மிகவும் உகந்த இடமாகும்.