கோன் ஹாரா காட் என்பது கங்கா மற்றும் கான்டாக் நதிகளில் உள்ள மிக முக்கியமான காட்களில் ஒன்றாகும். இந்த படித்துறையானது பல நூற்றாண்டுகளாக பல்வேறு இந்து மதச் சடங்குகள் மற்றும் தகனம் சடங்குகளுக்கு பெயர் பெற்றது.
புராதான நம்பிக்கைகளின் படி இந்த படித்துறையானது, கஜ (யானை) மற்றும் கராஹ் (முதலை) என்கிற இரண்டு பெயர்களின் தொகுப்பாகும். இங்கு நடைபெற்ற கஜ மற்றும் க்ராஹிற்கு இடையேயான சண்டையின் பொழுது பகவான் விஷ்ணு தலையிட்டு தனது பக்தனான கஜராஜாவின் வாழ்க்கையை காப்பாற்றினார்.
இந்த அத்தியாயம் ஹஜிபுரின் கலாச்சாரத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது. இந்த அத்தியாயத்தின் தாக்கத்தை இந்த நகரத்தின் சின்னம் மற்றும் ஹஜிபுரின் ரயில்வே நிலைய குவிமாடத்தில் காணலாம். உண்மையாகவே இந்த நகரம் இந்த பாரம்பரிய போராட்டத்தில் இருந்து அதன் பெயரான "கோன் ஹர" வைப் பெற்றது.