ஸ்ரீமந்த சங்கரதேவரின் சிஷ்யரான துறவி மாதவதேவர் கட்டிய வைஷ்ணவத் சத்திரம் தோபார்குரி சத்ரா. வைஷ்ணவத்தை அசாம் மாநிலத்துக்கு கொண்டு வந்தவர் ஸ்ரீமந்த சங்கரதேவா ஆவார்.
அசாமின் நாகரிகம் மற்றும் பழக்க வழக்கங்கள் இதனைத் தொன்று தொட்டே அமைந்திருக்கிறது எனலாம். தோபார்குரி சத்ரா 1587 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
மூன்று அறைகளைக் கொண்ட இந்த சத்திரத்தை பல ஆண்டுகளாக கட்டினார்களாம். அதன் பிறகு பல அறைகளை அமைத்துக்கொண்டனராம். இந்த சத்திரத்தில் கோக்ரானா, விக்ரானா மற்றும் ஸ்வர்த்கர் போன்ற பல புனித இடங்கள் உள்ளன.
இந்த சத்திரம் சமயம் வளர்க்கும் இடமாக மட்டுமல்லாமல், சமுதாய பழக்கவழக்கங்களை உணர்த்தும் இடமாகத் திகழ்கிறது.
ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் பெருமளவில் இங்கு வருகின்றனர். இந்தப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரே வைஷ்ணவத் திருத்தளம் தோபாகுரி சத்ரா ஆகும்.