ஹாஜோ நகரில் மட்டுமல்ல, அசாம் மாநிலத்திலேயே மிகவும் புகழ்பெற்ற, அதிகமானோர் தரிசித்த திருக்கோவில் ஹயாக்ரிவ மாதவ திருக்கோவிலாகும். விஷ்ணு பகவானை மூலவராகக் கொண்ட இந்தக் கோவிலில் அமைந்திருக்கும் சிலை, பூரி ஜெகன்னாதரின் சிலை போன்ற உருவ அமைப்பைக் கொண்டுள்ளது.
புத்தர் முக்தி அடைந்த நகரம் ஹாஜோ என்றும் கூறுகின்றனர். ஆகையால், ஹயாக்ரிவ மாதவ கோவிலுக்கு, இந்துக்கள் மட்டுமல்லாமல், பௌத்தர்களும் வந்து செல்கின்றனர்.
மார்ச் மாதத்தில் வரும் ஹோலிப் பண்டிகை இங்கு மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களும் ஹோலிப் பண்டிகையின் போது பெரும் திரளாக இங்கு கூடுகின்றனர். பிஹூ மற்றும் ஜன்மாஷ்டமி போன்ற பண்டிகைகளும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்தக் கோவில் எப்பொழுது கட்டப்பட்டது என்பதை சரியாக சொல்ல முடியாவிட்டாலும், 1543-ஆம் ஆண்டு, கோச் அரசர் ரகுதேவ் இதனை கட்டியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்பு இங்கு இருந்த கோவிலை முகலாயர்கள் இடித்துவிட்டனர்.