ஹாஜோ நகரின், மதனாச்சல மலை உச்சியில் அமைந்திருக்கிறது கேதாரேஷ்வர் திருக்கோவில். இந்தக் கோவில், இந்தியாவில் இருக்கும் சிவன் கோவில்களில் மிகவும் தொன்மையானதாக கருதப்படுகிறது.
கேதாரேஷ்வர் கோவில், 18 ஆம் நூற்றாண்டில், பிரமத்த சிங்க அரசர் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்டது. கேதாரேஷ்வர் கோவிலின் அருகில் மிகவும் புகழ்பெற்ற கணேஷ் திருக்கோவில் அமைந்துள்ளது.
கேதாரேஷ்வர் கோவிலில், கல்லால் ஆன மிகப்பெரிய சிவலிங்கம் உள்ளது. இந்த சிவலிங்கத்தை சுயம்பு லிங்கம் என்பர். இந்த அவதாரத்தில் இருக்கும் சிவபெருமானை, அர்த்தாநாரீஸ்வரர் என்றழைப்பர்.
இங்கு கவனிக்கத்தக்க ஒரு விஷயம் என்ன்வென்றால், கேதாரேஷ்வர் கோவிலில் உள்ள சிவலிங்கத்தில், உலோகத்தால் ஆன பாத்திரம் மூடியவாறு அமைந்திருக்கிறது.
ஹாஜோவில் சுற்றுப்பயணம் செய்யும் போது, கணேஷ் மற்றும் கேதாரேஷ்வர் திருக்கோவில்களை ஒரு சேர கண்டுகளிக்க முடியும். அங்கு காணப்படும் பழங்கால கல்வெட்டுகள் குறித்து, இன்றும் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது.