9 அடி உயரமுள்ள படவ லிங்க என்று அழைக்கப்படும் இந்த லிங்கமானது லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கருகில் உள்ளது. ஒரு நீர்வழிப் பாதையின் உள்ளே நீருக்குள் அமிழ்ந்திருக்கும்படி இந்த லிங்கம் வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் நூதனமான சிறப்பம்சமாகும்.
ஒற்றைக் கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ள இந்த லிங்கத்தில் மூன்று கண்கள் செதுக்கப்பட்டுள்ளன. இது சிவனின் மூன்று கண்களாக கருதப்படுகின்றன. தெய்வீகமும் புரதான கட்டிட மற்றும் சிற்பக்கலை அம்சமும் கலந்து மிளிரும் இந்த அமைப்பை பார்க்கும் போது தோன்றும் உணர்வு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.எனினும் இந்த சிவலிங்கள் பற்றி உள்ளூர் மக்களிடையே வாய்வழி கதைகள் பல சொல்லப்படுகின்றன.
அவற்றில் ஒன்று, ஹம்பி எனும் ஏழை ஆதிவாசி தன் ஏழ்மைக்காக சிவனிடம் வேண்டும் போது அப்படி தன் வேண்டுதலை நிறைவேற்றுகிற பட்சத்தில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்வதாக வேண்டிக் கொண்டதாகவும் அதன்படியே சிவ பெருமான் அவனுக்கு அருள் செய்ததால் அவன் இந்த சிவலிங்கத்தை ஸ்தாபித்ததாகவும் ஒரு கதை.
மற்றொன்று, ஒரு சாதாரண விவசாயக்குடும்பத்தைசேர்ந்த ஏழைப்பெண் ஒருத்தி இந்த லிங்கத்தை உருவாக்கினாள் என்பது.படவா என்ற சொல்லுக்கு உள்ளூர் மொழியில் ஏழை என்ற பொருள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஐதீகக் கதைகள் எப்படி இருப்பினும் ஒரே கல்லில் வடிக்கப்பட்டுள்ள இந்த லிங்கத்தின் கட்டுமானமும் அதை சூழ்ந்துள்ள சிற்ப கட்டிட வேலைப்பாடுகளும் பிரமிக்க வைக்கும் இயல்பை கொண்டுள்ளன.