சிவபெருமானுக்காக உருவாக்கப்பட்ட இந்த கோயில் நில மட்டத்துக்கு கீழே அமைக்கப்பட்டுள்ளது. உட்பிரகாரமும் கருவறையும் எப்போதும் நீரினுள் அமிழ்ந்திருக்கும்படி இது கட்டப்பட்டுள்ளது. ஆகவே கருவறையை பார்க்க அனுமதியில்லை என்றாலும் நீர் வற்றியுள்ள சமயங்களில் ஒரு குறிப்பிட்ட பகுதி வரை பிரகாரத்தில் சென்று பார்க்கலாம்.
ஹம்பியில் உள்ள புராதனக் கோயில்களில் ஒன்றாக கருதப்படும் இந்த கோயில் பயணிகள் மற்றும் சுற்றுலா ரசிகர்கள் மத்தியில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். மேன்மக்கள் குடியிருப்பு என்று அழைக்கப்படும் புராதன ஸ்தலத்துக்கருகில் ஹம்பி பேருந்து நிலையத்துக்கு அருகிலேயே இந்த கோயில் உள்ளது.
இந்த கோயிலின் வளாகத்தில் முன் பக்கம் உள்ள கோபுர வாசலின் வழியாக இதன் உள்ளே செல்லலாம். அதற்கடுத்தாக அகன்று காணப்படும் படிகள் வழியே கோயிலுக்குள் பயணிகள் இறங்கிச்செல்லலாம். கீழே தூண்கள் மற்றும் சிறு அறைகளுடன் கூடிய பிரகாரமும் நடுவில் கருவறையும் காணப்படுகிறது.
அச்சமயம் உள்ள தண்ணீர் மட்டத்தை பொறுத்து பயணிகள் கருவறைக்குள் சென்று பார்க்க முடியும் அல்லது முடியாமலும் போகலாம். இந்த கோயிலுக்கு வெளிப்புறத்தில் கோயிலைச் சுற்றிலும் அழகிய புல்வெளி உள்ளது.