இந்திய அன்னைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள பாரத மாதா கோவில் ஹரித்வாரின் புகழ்பெற்ற சுற்றுலா தளங்களின் ஒன்றாகும். புகழ்பெற்ற மதகுருவான ஸ்வாமி சத்யமித்ரானந்த கிரி என்பவரால் பல இந்துக் கடவுள்களுக்கும், சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ள, எட்டு மாடிகள் கொண்ட இந்த கோவில் உருவாக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி, வீர் சாவர்க்கர், சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரின் சிலைகள் இந்த கோவிலில் உண்டு.
1983ல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் திறக்கப்பட்ட இக்கோவில் 180அடி உயரத்தில் அமைந்துள்ளது. மேலும் கோவிலின் எட்டு மாடிகளில் ஒவ்வொரு மாடியும் ஒவ்வொரு முக்கியத்துவம் கொண்டுள்ளதாக விளங்குகிறது.
முதல் மாடி பாரத மாதாவிற்கும், இரண்டாம் மாடியான ஷூர் மந்திர் இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும், மூன்றாம் மாடியான மாத்ரு மந்திரி புகழ்பெற்ற இந்தியப் பெண்களுக்காகவும், நான்காம் மாடி இந்திய சன்னியாசிகளுக்காகவும், ஐந்தாம் மாடி இந்திய மதங்கள், வரலாறு மற்றும் இந்தியாவின் அழகை எடுத்துக்காட்டுவதாகவும், ஆறு மற்றும் எழாம் மாடிகளில் சக்தி மற்றும் விஷ்ணுவின் பல அவதாரங்களை எடுத்துரைப்பதாகவும் விளங்குகிறது.
எட்டாவது மாடி ஆன்மீக மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கும் நல்ல விருந்தாக இமயமலையின் அழகை பின்னணியில் கொண்ட சிவன் கோவிலாக அமைக்கப்பட்டுள்ளது.