ஹரித்வாரில் இருந்து 4கிமீ தொலைவில் அமைந்திருக்கும் இக்கோவில் பண்டைய கால சிவன் கோவிலாகும். 1810ஆம் ஆண்டு முதன்முறையாக ராணி தான்கெளரால் கட்டப்பட்டு, பின் 1962ல் மீண்டும் கட்டப்பட்டது.
புராணங்களின் படி தக்ஷ யாகம் நடைபெற்ற இடமாக இது கருதப்படுகிறது. இந்துக் கடவுளான சதியின் தந்தை தக்ஷ பிரஜாபதியால் இந்த யாகம் நடத்தப்பட்டது.
அனைவரையும் யாகத்திற்கு அழைத்துவிட்டு தன் கணவரான சிவனை மட்டும் அழைக்காததால் கோபம் கொண்ட சதி, யாக குண்டத்தில் விழுந்து உயிரை விட்டதாகக் கூறுகிறார்கள். சதி விழுந்த இடமாக கருதப்படும் இடத்தில் சிறிய குழி ஒன்று இருப்பதாக கருதுகிறார்கள்.
கோவிலின் நடுவே லிங்க வடிவத்தில் ஒரு சிவன் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் இந்து மாதமான சவானில் நிறைய பக்தர்கள் இங்கு குவிகிறார்கள்.