ஹர்-கி-பெளரியில் இருந்து 5கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது சப்தரிஷி ஆசிரமம். இந்து புராணங்களின் படி அத்ரி, காஷ்யம், ஜமத்கனி, பரத்வாஜர், வஷிஷ்டர், விஸ்வாமித்திரர் மற்றும் கவுதம் ஆகிய சப்த ரிஷிகள் தியானம் செய்த இடத்தில் சப்தரிஷி ஆசிரமம் அமைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
மேலும் புராணங்களின் படி கங்கை நதி இவ்விடத்தில் சன்னியாசிகள் அமைந்தியாக தியானம் செய்யும் வண்ணம் தன்னை ஓடைகளாக பிரித்துக்கொண்டு சத்தமின்றி ஓடியதாகவும் சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக இவ்விடம் சப்த சரோவர் என்றும் சப்தரிஷி குண்டம் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் ஏழாக பிரிந்திருக்கும் சிறிய ஓடைகள் ஒன்றாக இணைந்தது நீல் தாரா என்றழைக்கப்படும் பிரம்மாண்ட கால்வாயாக உருவெடுக்கிறது.