யாகாச்சி அணை பேலூரிலுள்ள முக்கியமான சுற்றுலா அம்சமாகும். இது ஹாசனிலிருந்து 45 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. 2004ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ள இந்த அணை ஹாசன், சிக்மகளூர், பேலூர் போன்ற நகரங்களின் நீர்த்தேவையை தீர்ப்பதற்காக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 965 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த அணை நீர்த்தேக்கம் காவிரி ஆற்றின் துணை ஆறாகிய யாகாச்சி ஆற்றின் குறுக்கில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் நீர் வெளியேற்ற அளவு 4300 கியூசெக்’குகளாகவும் (கியூபிக் செண்டி மீட்டர்) நீர்வரத்து 4500 கியூசெக்’குகளாகவும் உள்ளது. நக்சல்கள் நடமாட்டம் கருதி இங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.சமீபத்தில் இந்த அணை நீர்த்தேக்க பகுதியில் சுற்றுலாப்பயணிகளைக் கவர்வதற்காக ‘யாகாச்சி சாகச நீர் விளையாட்டு மையம்’ ஒன்றும் துவங்கப்பட்டுள்ளது. இந்த மையம் சிறு படகுச்சவாரி, சொகுசுப்படகு சவாரி, வேகப்படகு சவாரி, துடுப்புப்படகு சவாரி, ஜெட் நீர்ச்சறுக்கு விளையாட்டு மற்றும் பம்பர் சவாரி போன்ற பல வகையான உல்லாச பொழுது போக்கு அம்சங்களை பயணிகளுக்கு வழங்குகிறது.
இவை தவிர இயற்கையான சூழலில் ரசித்து ஓய்வெடுக்க விரும்பும் ஏகாந்தமான அமைதியையும் எழிலையும் இந்த ஸ்தலம் பெற்றுள்ளது.