ஹஸ்தினாபூர் நகரத்தை ஜைன மார்க்கத்தினர் திராத் ஷேத்திரம் எனும் மிகப்பெரிய யாத்திரை நகரமாகவே கருதுகின்றனர். இங்குள்ள திகம்பர் ஜெயின் படா மந்திர் ஒரு பழமையான ஜைன திருக்கோயிலாகும்.
படா எனும் சொல்லுக்கேற்ப இது உண்மையிலேயே அளவில் பெரியதான ஒரு கோயிலாகும். 40 அடி உயரமுள்ள ஒரு குன்றின்மீது இது அமைந்திருக்கிறது.
இந்த உன்னதமான கோயில் 4 அடி உயரமுள்ள ஒரு பீட அமைப்பின்மீது எழுப்பப்பட்டிருக்கிறது. இதன் உச்சியில் கலையம்சம் நிரம்பிய கலசக்கூம்பு அமைப்பு காட்சியளிக்கிறது. பீடப்பகுதியில் மூன்று வாசல்கள் மற்றும் பிரதான சிலையாக ஷாந்திநாத பஹவானின் சிலை பத்மாசன கோலத்தில் காணப்படுகிறது.
இந்த கோயிலின் ஒரு முக்கியமான சிறப்பம்சமாக இது ஒரு அடியிலிருந்து நுனி வரை சுருண்டு செல்லும் ஒரு அமைப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதை சொல்லலாம். இதன் உட்புறம் முழுதும் ஜைன கதைகளை விவரிக்கும் தங்க ஜரிகை ஓவியங்கள் நிரம்பியுள்ளன.
இவற்றை உருவாக்க 7-8 கிலோ தங்கம் தேவைப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த கோயில் வளாகத்தில் ஒரு நூலகம், விரதாஷ்ரம், ஜல் மந்திர், ஆச்சார்ய வித்யானந்த் மியூசியம் மற்றும் கைலாஷ் பர்வத் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன. யாத்ரிக பக்தர்களுக்கான உணவு மற்றும் தங்குமிட வசதியையும் இந்த கோயில் அளிக்கிறது.