பனிபடந்த இமயமலையின்மீது அமைந்திருக்கும் இந்த கைலாச பர்வதம் ஜைனப்பிரிவினரால் ஒரு புனித ஸ்தலமாக கருதப்படுகிறது. இங்குதான் முதல் தீர்த்தங்கரர் ரிஷபதேவர் முக்தியடைந்ததாக நம்பப்படுகிறது.
எல்லா பக்தர்களும் இமயமலையிலுள்ள இந்த கைலாச பர்வதத்திற்கு விஜயம் செய்வது இயலாத காரியம் என்பதால் ஜைன சமூகத்தார் அம்மலையின் மாதிரி வடிவத்தினை ரிஷபதேவர் அவதரித்த ஸ்தலமான ஹஸ்தினாபூரில் பக்தர்களின் சுலபமான தரிசனத்திற்காக உருவாக்கியுள்ளனர்.
ஆதிநாத பஹவான் தனது 13மாத உபவாசத்தினை அக்ஷ்ய திரிதியையின் போது முடித்தக்கொண்ட முக்கிய ஸ்தலமாகவும் இந்த ஹஸ்தினாபூர் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 131 அடி உயரம் கொண்ட இந்த கைலாஷ் பர்வத் அமைப்பில் 11.25 அடி உயரமுடைய ரிஷபதேவர் சிலை பத்மாசன கோலத்தில் காட்சியளிக்கின்றது.
கைலாஷ் பர்வத் வளாகம் மூன்று பிரிவுகளை உள்ளடக்கியிருக்கிறது. இதில் கடந்த கால, நிகழ் கால மற்றும் எதிர்கால தீர்த்தங்கரர்களை குறிக்கும் 72 வட்ட வடிவ கோயில்களை இங்கு பார்க்கலாம் ஒவ்வொரு வட்டவடிவ அமைப்பும் ஒவ்வொரு காலகட்டத்துக்குரிய 24 தீர்த்தங்கரர்களை குறிப்பதாக சொல்லப்படுகிறது.
அலங்கார வேலைப்பாடுகள் நிரம்பிய வாசல் கதவுகள், அலங்கரிக்கப்பட்ட உள்கூரை, தூண்கள் மற்றும் அலங்கார பலகைகள் போன்றவை இந்த அமைப்பின் சிறப்பம்சங்களாக பிரசித்தி பெற்றுள்ளன.