ஜைன ஆகம நூல்களில் ஹஸ்தினாபூர் நகரம் ஐதீக முக்கியத்துவம் வாய்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. பரதச்சக்கரவர்த்தி துவங்கி 8 சக்கரவர்த்திகள் இந்த ஸ்தலத்தில் அவதரித்ததாக அவற்றில் சொல்லப்ப்பட்டிருக்கிறது. ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பஹவான் பரசுராம் என்பவரும் இதில் அடக்கம்.
வரலாற்று முக்கியத்துவம் கொண்ட ஷ்வேதம்பர் ஜெயின் கோயில் புராதனமான சிலைகளுடன் காட்சியளிக்கிறது. 1960ம் ஆன்டில் விஜய் வல்லப் சூரி ஜி பிரிவை சேர்ந்த ஆச்சார்யா விஜய் சமுத்ர சூரிஜி இந்த கோயிலுக்கு விஜயம் செய்யும் வரை இது கவனிப்பில்லாமல் கிடந்திருக்கிறது.
இந்த ஆச்சார்யா உடனே இந்த கோயிலை புதுப்பிக்க செய்து உச்சியில் ஒரு கூம்புக்கலச அமைப்பையும் ஸ்தாபித்துள்ளார். பிரதான சிலையான ஷீ ஷாந்திநாதரின் இருபுறமும் ஸ்ரீ குந்துநாத் மற்றும் ஸ்ரீ அர்நாத் பஹவான் ஆகியோரின் சிலைகளையும் வைத்துள்ளார்.
முதலாம் தீர்த்தங்கரர் ஆதிநாத பஹவான் அக்ஷ்ய திரிதியையின் போது ஷ்ரேயஸ் குமார் அளித்த கரும்புச்சாறை அருந்தி தனது 13மாத உபவாசத்தினை முடித்துக்கொண்ட ஸ்தலம் என்பதால் இந்த கோயில் சிறப்பு முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.
இந்த கோயில் பார்ணா எனப்படும் உபவாசமுடிப்பு கூடத்தை கொண்டுள்ளது. அக்ஷய திரித்யை நாளில் நாடெங்கிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர். வர்ஷி தப் எனும் ஒரு வருட உபவாச விரதத்தை அவர்கள் அச்சமயம் இக்கோயிலில் முடித்துக்கொள்கின்றனர்.