ஹேம்குந்த் ஏரி ஒரு புனிதமான ஏரியாக கருதப்படுகிறது. இந்த ஏரி வருடத்தில் எட்டு மாதங்கள் பனியில் உறைந்து போய் இருக்கும். ஹேம்குந்த் குருத்வாராவின் மிக அருகாமையில் உள்ள இந்த ஏரியை சுற்றி பனி படர்ந்த மலைகளை காண முடியும்.
சீக்கியர்களின் பத்தாவது குருவான குரு கோபிந்த் சிங் இந்த ஏரிக்கரையில் தியானம் செய்தார் என்று நம்பப்படுகிறது. அவரைத் தவிர மெதசா போன்ற மற்ற போதகர்களும் இங்கு தியானம் செய்ததாக சொல்லப்படுகிறது.