அக்ரோஹா தாம் என அழைக்கப்படும் அக்ரோஹா கோயில் பெயருக்கு ஏற்றார்ப்போல் அக்ரோஹா என்றழைக்கப்படும் ஹிசார் மாவட்டத்தின் கிராமம் ஒன்றிலமுள்ளது. 1976ல் துவக்கப்பட்ட இதன் கட்டுமானப்பணி எட்டு வருடங்களுக்குப் பின் 1984ல் நிறைவுற்றது.
மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள இக்கோவிலின் முதல் வளாகம் மஹாலட்சுமி என்ற முதன்மை கடவுளுக்கும், மேற்கு மற்றும் கிழக்கு வளாகங்கள் சரஸ்வதி மற்றும் மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு அக்ரோஹாவை ஆண்ட மகாராஜா அகர்சன் என்ற மன்னருக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
ஷக்தி சரோவர் என்ற பெரிய குளம் ஒன்று கோவிலின் பின்புறம் உள்ளது. 1988ல் 41 புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட நீரின் மூல இக்குளம் நிரப்பப்பட்டது. வடமேற்கு பகுதியில் உள்ள மேடை ஒன்றில் தேவர்களும் அசுரர்களும் கடலைக் கடைந்த புராணக் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.
இயற்கை மருத்துவத்தின் மூலம் குணப்படுத்தும் மருத்துவமனை ஒன்றும் இவ்வளாகத்தில் அமைந்துள்ளது. அக்ரோஹா மஹா கும்பமேளா என்ற விழா ஒவ்வொரு வருடமும் ஷரத் பூர்ணிமா அன்று அனுஷ்டிக்கப்படுகிறது,