14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாபா பன்னீர் பாட்ஷா என்ற ஆன்மீக குருவின் கும்பாத் எனப்படும் கல்லறை ஒன்றும் இங்கு உள்ளது. சதுர வடிவில் நாலாபுறமும் வளைவு நுழைவாயில்களுடன் இச்சமாதி காணப்படுகிறது.
இவரது சீடர்களில் ஒருவரான ஷெர் பஹோல் என்பவர் கியாஸ் உத் தீன் துக்ளக் ஆட்சிக்கு வருவார் என்பதை கணித்த புகழ்பெற்ற துறவி ஆவார். நகரின் மையப்பகுதியில், நாலாப்புறமும் திறப்புகளுடன் உள்ள கும்பாத்தின் கீழ்பாதி கங்கர் கற்களாலும் மேற்பாதி லகோரி கற்களாலும் அலங்கர்க்கப்பட்டுள்ளது.
கூரை எண்கோணமுடைய மேடையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இவ்வளாகம் ஹரியானா அரசால் பாதுகாக்கப்பட்ட புராதானச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.