ஹோடலில் உள்ள சமேலி வான் புனிதமான ஒரு இடமாக கருதப்படுகிறது. இங்கு ஹனுமானுக்காக கட்டப்பட்ட பழங்கால கோவிலான குரங்கு கோவில் ஒன்றும் உள்ளது.
சுற்று வட்டாரத்தில் உள்ள இடங்களில் இருந்து பக்தர்கள் கூட்டம் இங்கே வந்த வண்ணம் இருக்கும், முக்கியமாக செவ்வாய்கிழமைகளில்.
கோவில் வளாகத்தை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான குரங்குகளுக்கு இங்கு வரும் பக்தர்கள் வாழைப்பழங்களை அளிப்பார்கள். இங்கு இருக்கும் பல விதமான பறவைகளை பயணிகள் கண்டு களிக்கலாம். இங்கு புலம்பெயர் பறவைகளையும் அதிக அளவில் காண முடியும்.