கலாசேஸ்வரா கோயில் கலசா மாவட்டத்தில், ஒரு மலை உச்சியில் அமைந்திருக்கிறது. கலாசேஸ்வரா கோயிலில் இரண்டு பெரிய யானை சிலைகள் இருக்கின்றன. அதில் அசுரனை காலில் மிதித்தவாறு நிற்கும் ஆண் யானை விநாயக கடவுளையும், பெண் யானை அவருடைய துணைவியையும் குறிக்கிறது. அதுமட்டுமல்லாமல் சிவபெருமான் தன்னை தானாகவே கலசத்தில் பிரதிஷ்டை செய்துகொண்ட சிவலிங்கம் ஒன்றும் இங்கே இருக்கிறது.