ஆனந்தா புத்த விஹாரம் என்பது ஒரு மிகப்புராதனமான புத்த விகாரம் எனப்படும் புத்தர் கோயிலாகும். இது ஹைதராபாத் நகரத்தில் ஒரு சிறிய மலையின் மீது வீற்றுள்ளது.
முதற்பார்வையிலேயே இந்த கோயில் உங்களை கவர்ந்துவிடும் தோற்றத்தை கொண்டுள்ளது. மேலும் இந்த மலை மீதிருந்து நகரத்தின் அழகு முழுவதையும் பார்த்து ரசிக்கமுடிவது மற்றொரு சிறப்பம்சமாகும்.
முழுக்க முழுக்க புத்த மரபுப்படியே இந்த கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலிலுள்ள மிகப்பெரிய கூடத்தில் இயற்கையான சூரிய வெளிச்சம் வந்து விழுமாறு பெரிய ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கோயிலின் சூழலின் நிலவும் அமைதியும் சாந்தமும் அமானுஷ்ய சக்தியுடன் தங்கள் மீது கவிழ்வதை பார்வையாளர்கள் உணரமுடியும். நகர வாழ்க்கையின் சந்தடிகயிலிருந்து விலகி எங்கோ ஒரு அற்புத ஆன்மிகப்பிரகாசத்தில் நாம் நுழைந்துவிட்டது போன்ற உணர்வை இந்த புத்தர் கோயில் அளிக்கிறது.
தங்கத்தால் ஆன ஒரு பெரிய புத்தர் சிலை இந்த கோயிலின் கூடத்தில் வீற்றிருக்கிறது. பல பக்தர்கள் இந்த கூடத்தில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டிருப்பதையும் காணலாம்.