ஹைதராபாத் நகரிலுள்ள இந்த பிர்லா பிளானட்டேரியம் இந்தியாவிலேயே முதல் முதலாக அமைக்கப்பட்ட கோளரங்கமாக புகழ்பெற்றுள்ளது. இது மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி. ராமாராவ் அவர்களால் 1985ம் ஆண்டு திறக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுடன் ஹைதராபாத் நகரத்துக்கு சுற்றுலா மேற்கொள்ளும் பட்சத்தில் இந்த கோளரங்கம் மற்றும் அறிவியல் மையத்துக்கு மறக்காமல் விஜயம் செய்வது அவசியம். இந்த அரங்கின் உள்ளே விண்வெளி மற்றும் கிரகங்கள் குறித்த ஏராளமான ரகசியங்களை மிக எளிதாக தெரிந்துகொள்ளலாம்.
வேறு எங்குமே இது போன்ற அனுபவத்தை பெற முடியாது என்று சொல்லும் அளவுக்கு இந்த கோளரங்கத்தில் அதிநவீன உபகரணங்களுடன் காட்சிதொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
சிறியவர் முதல் பெரியவர் யாவருமே ரசிக்கக்கூடிய விதத்தில் இந்த மையம் அமைந்துள்ளது. விண்வெளி கிரகங்களின் மத்தியிலேயே நாம் மிதப்பது போன்ற பிரமையை இந்த கோளரங்கத்தில் வழங்கப்படும் திரைக்காட்சி அனுபவம் ஏற்படுத்திவிடுகிறது. பொழுதுபோக்கு அம்சத்தோடு அறிவியல் கல்வியையும் உள்ளடக்கிய இந்த பிர்லா பிளானட்டேரியம் பயணிகள் அவசியம் விஜயம் செய்யவேண்டிய இடமாகும்.