லும்பினி பூங்கா ஹைதராபாத் நகரிலுள்ள மிக அற்புதமான ஏரியான ஹுசேன் சாகர் ஏரிக்கு மிக அருகிலேயே அமைந்துள்ளது. நகரின் மையப்பகுதியிலேயே அமைந்திருப்பதாலும், இங்கிருந்து மற்ற முக்கிய சுற்றுலா அம்சங்கள் அருகிலேயே உள்ளதாலும் இது பயணிகள் மத்தியில் பிரசித்தமாக அறியப்படுகிறது.
1994ம் ஆண்டு கட்டப்பட்டுள்ள இந்த பூங்கா அதற்குப்பின்னர் தொடர்ந்து பலவகைகளில் மெருகூட்டப்பட்டு தற்போது பார்வையாளர்கள் ரசிக்கும் விதத்தில் நவீன அழகுடன் தோற்றமளிக்கிறது.
இந்த லும்பினி பூங்காவில் லேசர் ஒளியமைப்பு வசதியுடன் கூடிய ஒரு ஆடிடோரியம், படகுச்சவாரி வசதி, பராமரிக்கப்பட்ட புல்வெளிகள் மற்றும் இசை நீரூற்றுகள் போன்றவை உள்ளன.
எனவே குடும்பத்துடன் பிக்னிக் சிற்றுலா மேற்கொள்ளவும் கலந்துரையாடல் சந்திப்புகளுக்கும் மிகவும் ஏற்ற இடமாக இது அறியப்படுகிறது. இந்தியாவிலேயே முதன்முதலாக லேசர் வசதியுடன் 2000 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் இங்குள்ள ஆடிடோரியம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஹைதராபாத் நகரத்துக்கு ஒரு சர்வதேச அடையாளத்தை உருவாக்கவேண்டும் என்பதற்காகவே இந்த ஆடிடோரியம் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த ஆடிடோரியத்தில் ஒவ்வொரு நாளும் ஹைதராபாத் நகரின் வரலாற்றைக்கூறும் படக்காட்சி ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் திரையிடப்படுகிறது.