மக்களுக்கான பூங்காத்தோட்டம் எனும் பொருத்தமான பொருளைத்தரும் ‘பாக்-இ-ஆம்’ என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த பப்ளிக் கார்டன்ஸ் ஹைதராபாத் நகரத்திலுள்ள முக்கியமான பூங்காத்தோட்டமாகும்.
நிஜாம் மன்னர்களால் கட்டப்பட்ட இந்த பூங்கா 1920ம் ஆண்டு திறக்கப்பட்டது. இன்றும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் இந்த பூங்காத்தோட்டத்துக்கு விஜயம் செய்கின்றனர்.
நிறைய பூங்கா தோட்டங்கள் ஹைதராபாத் நகரில் அமைந்திருந்தாலும் மக்களுக்கு விருப்பமான பூங்காவாக இந்த பப்ளிக் கார்டன்ஸ் முதன்மையாக பிரசித்தி பெற்றுள்ளது. இந்த பூங்காத்தோட்ட வளாகத்துக்குள்ளேயே ஆந்திர பிரதேச ஸ்டேட் ஆர்க்கியாலஜிகல் மியூசியமும் அமைந்துள்ளது.
இது கலை ரசிகர்களிடையே பிரசித்தமாக அறியப்படுவது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் ஜூபிளி ஹால், மாநில சட்டப்பேரவை, தெலுகு லலிதகலா தோரணம் மற்றும் ஜவஹர் பால பவன் போன்ற முக்கியமான அமைப்புகளும் இந்த பூங்காத்தோட்ட வளாகத்திற்குள்ளேயே இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர பிரதேச ஸ்டேட் ஆர்க்கியாலஜிகல் மியூசியத்தை அடுத்து நவீனக்கலை அருங்காட்சியகமும் அமைந்துள்ளது. இங்குள்ள அருங்காட்சியகங்களை பார்ப்பதில் விருப்பம் இல்லாவிட்டாலும் பயணிகள் இந்த பூங்காத்தோட்டத்துக்கு தவறாமல் விஜயம் செய்வது அவசியம்.
பசுமையான தூய்மையான புல்வெளிகளுடன் காட்சியளிக்கும் இந்த ரம்மியமான தோட்டப்பூங்கா மாலை நேரத்தை இனிமையாக கழிப்பதற்கு மிகவும் ஏற்றது.