கண்ட தேவிக்காக அமைக்கப்பட்டுள்ள இந்தக் கோயில் புராதன கலை அம்சத்துடன் காணப்படுகிறது. மலைகளைக்காக்கும் தெய்வமாக கண்டதேவியை உள்ளூர் மக்கள் வழிபடுகின்றனர்.
மேற்குத்தொடர்ச்சி மலையின் சிகரங்களான உத்வத், ஹரிஹர், துர்வார் போன்றவை இந்தக்கோயில் ஸ்தலத்திலிருந்து பார்க்கும் போது அற்புதமாக காட்சியளிக்கின்றன.
தொன்மையான புராதன அம்சத்துடன் காணப்படும் இந்த சிறிய கோயில் நம்முள் இறைஉணர்வை தூண்டும் இயல்பைக்கொண்டுள்ளது. இகத்புரியில் அவசியம் தரிசிக்க வேண்டிய கோயில் இந்த கண்டதேவி கோயிலாகும்.