இம்பாலில் உள்ள பல்வேறு கோவில்களில், ஹனுமான் கோவில் மிகவும் மதிக்கத்தக்க கோவிலாகும். மகாபலி வனப்பகுதியில், இம்பால் நதிக்கரையில் இருக்கும் இந்த கோவிலில், குரங்குக் கடவுளான ஹனுமானின் சிலை மனித வடிவத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்டு உள்ளது.
1725-ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட இந்த பழமையான கோவிலை கட்டியவராக அப்போதைய அரசர் காரிப் நிவாஜ் கருதப்படுகிறார். அந்த காலகட்டத்தில் கட்டப்பட்ட ஒரே கோவிலாக இது உள்ளது.
இந்த கோவிலின் கட்டிடக்கலை வங்காளத்திலிருப்பதைப் போல வட்ட-வடிவ கூரை போன்று உள்ளது. மணிப்பூரில் பின்பற்றப்பட்டு வரும் ராமநந்தி என்ற இந்து சமயப் பிரிவின் வரலாற்று மற்றும் தொல்பொருள் அடையாளமாகவே இந்த ஹனுமான் கோவில் உள்ளது.
இந்த கோவிலைச் சுற்றியிருக்கும் காடுகளில் ஏராளமான குரங்குகள் உள்ளன. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த குரங்குகள் மகாபலி வனத்தின் எல்லையைத் தாண்டி ஒரு போதும் சென்றதில்லை மற்றும் கோவிலின் எல்லையையொட்டியே வாழ்ந்து வருகின்றன.