மணிப்பூரிலுள்ள மலைகளிலிருந்து கீழ் நோக்கியவாறு சில சிறிய நதிகளும் பாய்ந்து வருகின்றன. இம்பால் பள்ளத்தாக்கில் இந்த நதிகளில் சில வறண்டு போய் இந்த பள்ளத்தாக்கிற்கு ஓவல் வடிவத்தை தருகின்றன.
சுமார் 1843 ச.கிமீ பரப்பளவைக் கொண்டிருக்கும் இம்பால் பள்ளத்தாக்கு மணிப்பூரின் பரப்பளவில் பத்தில் ஒரு பங்கினை உடையதாகும். இந்த பள்ளத்தாக்கில் தான் இம்மாநிலத்தின் 70 சதவிகித மக்கள்தொகையினரும் வாழ்ந்து வருகின்றனர். இம்பால் நதி, குகா, ஐரில், தௌபல் மற்றும் சேக்மே ஆகியவை இந்த பள்ளத்தாக்கில் பாய்ந்து வரும் நதிகளாகும்.
இந்த பள்ளத்தாக்கில் எண்ணற்ற ஏரிகளும், சேற்று நிலப்பகுதிகளும் உள்ளன. இங்கிருக்கும் லோக்டாக் ஏரி வடகிழக்கு இந்தியாவிலேயே மிகப்பெரிய நன்னீர் ஏரியாக கருதப்படுகிறது. 'மிதக்கும் ஏரி' என்று பெயர் பெற்றிருக்கும் லோக்டாக் ஏரி, மணிப்பூரின் முதன்மையான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.
லோக்டாக் ஏரி மட்டுமல்லாமல், இம்பால் பள்ளத்தாக்கில் காங்லா அரண்மனை, மணிப்பூர் மாநில அருங்காட்சியகம் மற்றும் போலோ மைதானங்களும் உள்ளன.