அரிய வகை விலங்குகளை பாதுகாப்பதற்காகவே மணிப்பூர் விலங்கியல் தோட்டங்கள் கட்டப்பட்டுள்ளன. இம்பால்-காங்சுப் சாலையில், இம்பால் நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த தோட்டங்கள் சுமார் எட்டு ஹெக்டேர் பரப்பளவில் விரிந்திருக்கிறது.
உண்மையிலேயே அழிவுறும் நிலையிலுள்ள சில உயிரினங்களை பாதுகாத்து வைத்திருக்கும் இந்த இடம் 'மணிப்பூரின் ஆபரணப் பெட்டி' என்ற புகழ்பெற்றிருக்கிறது.
லிஸ்ஸோம் மற்றும் ப்ரோ-ஆன்ட்லெர்டு தியாமின் மான்கள் (சங்காய் மான்கள்) மணிப்பூர் விலங்கியல் பூங்காவில் உள்ள புகழ் பெற்ற அரிய உயிரினங்களாகும். 55 வகை பறவையினங்களும் மற்றும் 420 வகை விலங்கினங்களும் இந்த விலங்கியல் மையத்தில் பாதுகாப்பாக உள்ளன. மேலும், அழியும் நிலையிலுள்ள 14 விலங்கினங்களும் இங்கு உள்ளன.
இந்த விலங்கியல் தோட்டத்திற்கு தெற்குப் பகுதியில் மணிப்பூர் வேளாண்மை பல்கலைக்கழகமும், மேற்கில் லாங்கோல் சாலையும் உள்ளன. பிற பகுதிகள் நெல் வயல்களால் சூழப் பட்டுள்ளன.
சோர்வடைந்த உடலுக்கு மணிப்பூர் விலங்கியல் தோட்டத்தின் பசுமையான காட்சி புத்ததுணர்ச்சி கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த இடத்தில் ஒரு முழு நாளை செலவிடுவது நல்லது.