உலகிலேயே மிகவும் பழமையான போலோ மைதானம் இம்பாலில் உள்ளது. குதிரைகளின் மீதமர்ந்து கொண்டு புள்ளிகள் எடுக்கும் போலோ விளையாட்டை பிரிட்டிஷார் பிரபலப்படுத்தியிருந்தாலும், இந்த விளையாட்டிற்கு மணிப்பூர் தான் தாயகமாகும்.
இது ஒரு குழு விளையாட்டு ஆகும். மணிப்புரி மொழியில் 'கான்ஜய்-பேஸீ', 'சாகோல் காங்ஜே' மற்றும் 'புலு' என்று அழைக்கப்பட்டு வந்த இந்த விளையாட்டு பிறகு 'போலோ' என்று பெயர் பெற்றது.
கி.பி.33-ம் ஆண்டைச் சேர்ந்த ராஜ குடும்ப வரலாற்று நிகழ்ச்சி தொகுப்பான செய்தாரோல் கும்பாபா என்ற நூலில் இம்பாலில் போலோ மைதானம் இருந்ததற்கான குறிப்புகள் உள்ளன.
இநத போலோ மைதானங்களில் விளையாடுவதற்கான பல முக்கியமான மனிதர்களும், விளையாட்டு வீரர்களும் இந்த மைதானத்திற்கு வந்திருக்கின்றனர்.
நவீன போலோ விளையாட்டின் தந்தை என்றழைக்கப்படும் லெஃப்டினென்ட் ஷேரெர் இந்த மைதானத்திற்கு 1850-களில் வந்திருக்கிறார். 1901-ம் ஆண்டு இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த கர்சன் பிரபுவும் இந்த மைதானத்திற்கு வந்திருக்கிறார்.
இன்று வரையிலும், ஒவ்வொரு ஆண்டும் இந்த மைதானத்தில் போலோ விளையாடப்பட்டு வருகின்றது. இந்த மைதானத்திற்கு அருகில் இருக்கும் இம்பால் போலோ ரைடிங் கிளப், போலோ விளையாட்டிற்கு தொடர்ச்சியாக பயிற்சி கொடுத்து வருகிறது.