கோமத்கிரி இயற்கையான சூழலில் ஒரு மலையிம் மீது அமைந்துள்ள சமண சமய கோவிலாகும். இந்த கோவிலில் உள்ள மிகப்பெரிய கோமதேஸ்வரர் அல்லது பாஹுபாலியின் சிலை மிகவும் புகழ் பெற்றதாகும்.
இந்த சிலையின் உயரம் 21 அடி உயரமாகவும் மற்றும் சரவணபெலகோலாவில் உள்ள பாஹுபாலி சிலையின் பிரதியாகவும் உள்ளது. கோமத்கிரியில், சமண மதத்தின் 24 தீர்த்தங்கரர்களின் நினைவாக 24 மார்பிள் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்த கோவிலின் காட்சி உங்கள் மனதை விட்டு நீங்காத இடம் பெற்றிருக்கும். அமைதியான சூழலில் அமைந்திருக்கும் வெள்ளை அதிசயமான இந்த கோவில், அமைதி மற்றும் இயற்கையின் மடியில் அமர்ந்து இரசிக்க மிகவும் ஏற்ற இடமாக உள்ளது.
உங்களுடைய வார இறுதி நாட்களை, குடும்பத்துடன் கழிக்க மிகவும் ஏற்ற அமைதியான இடமாக கோமத்கிரி உள்ளது. இந்த இடத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகவே விருந்தினர் இல்லங்கள், விடுதிகள் மற்றும் தர்மாசாலா போன்ற இடங்களை கொண்டுள்ள இடமாக கோமத்கிரி உள்ளது.