இந்தூர் நகரத்தின் பாரம்பரியத்தை பாதுகாத்து நிற்கும் இடமாக இந்தூர் அருங்காட்சியகம் உள்ளது. இந்தூர் அருங்காட்சியகம் மத்திய அருங்காட்சியகம் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.
இந்த மாநிலத்தின் பாரம்பரியம், கலாச்சாரம், மூதாதையர்களின் வாழ்க்கை முறை மற்றும் வளமான நாகரிகம் ஆகியவற்றை அறிய முயல்பவர்களுக்கான அறிவுப் புதையலாக இந்த அருங்காட்சியகம் உள்ளது.
இந்தூரில் தொடக்கம் பெற்ற பர்மார் சிற்பங்களைப் பற்றிய குறிப்புகளை அறிந்து கொள்ள மிகச்சிறந்த இடமாகவும் இது உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் இந்தூரின் வளமையான இந்து மற்றும் சமண சமய சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன.
வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த தொல்பொருட்கள், நாணயங்களின் சேகரிப்புகள், ஆயுதங்கள், புராண கால சிற்பங்கள் என பல்வேறு வரலாற்று சின்னங்களும் இந்தூர் அருங்காட்சியகத்தில் உள்ளன.
இந்த அருங்காட்சியகத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்தூரின் வளமான பாரம்பரியம் மற்றும் ஆர்வமூட்டும் வரலாறு ஆகியவற்றைக் கண்டு மிகவும் ஆச்சரியப்படுவார்கள்.